Posts

Showing posts from June, 2019

Tamil kavithai about loneliness - தனிமை

Image
மௌன மொழியில்  மனமெனும் மேடையில்  நினைவுகளின் ஆர்ப்பரிப்பில்  இதயத்தின் இசையமைப்பில்  நிஜத்தையும் நிழலையும் பிரித்தெடுத்து  அறிவால் நடத்தப்படும் அரங்கேற்றம்  "தனிமை"

Rain kavithai in tamil - மழை

Image
சூரியனும்  பூமியும்  யாகத்தை நடத்திட,  அதிலிருந்து வெளி வந்த நீர் பெண்ணவள்  மேகமாய் உருவெடுக்க,  அவள் மீது கொண்ட காதலில் தென்றலும் அவளோடு சேர்ந்தாட,  இடியும் மின்னலும் முழங்க  திருமணமும் நடந்தேற,  வான்மகள் பிரசவித்த செல்ல குழந்தை  " மழை "

Motivational tamil kavithai - நட்பே

Image
நட்பே! அன்பை நீ அளித்தால்  ஆனந்தம் உன்னை அடையும் ! இனிமையாய்  நீ பேச  ஈரேழுலகமும்  அடி பணியும் ! உலகமே உன் கலமாக்கி  ஊக்கத்தோடு நீ உழைத்தால்,  எண்ணியது கைகூடும்  ஏற்றமான வாழ்வமையும்  ஐஸ்வர்யம் வந்தடையும் ! ஒற்றுமையின் வலிமையை  ஓங்கி நீ உரைக்க  ஔவியம்  பேசுவோர்  இவ்வுலகில்லை அஃதே மனதில் கொள் !!

Wedding day wishes in tamil - திருமணநாள் வாழ்த்துக்கள்

Image
இனிய உறவு  இனிதாய் அமைந்திட  இன்று போல் என்றும் வாழ  இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் !!

Friendship tamil kavithai - நட்பு

Image
கணம் ஒரு முறை நினைக்கவில்லை,   தினம் ஒரு முறை பேசவில்லை  ஆனாலும்   இனிக்கிறது நம் நட்பின் நினைவுகள்! அன்பாய் பேசியதில்லை அசிங்க படுத்தாத நாளில்லை ஆனாலும் அலைபாய்கிறது நம் நட்பின் அதிர்வுகள் ! நேரில் பார்க்கவில்லை நேரம் கடந்து பேசவில்லை ஆனாலும் நீ அறிவாய் என் உள்ளுணர்வை ! பழய நினைவுகள் நெஞ்சில் நிழலாட பழகிய நாட்கள் பசுமரத்தாணியாய் பதிந்தாட பக்குவமாய் நான் எழுதுகிறேன் நம் நட்பின் பரிவர்த்தனையை !! நட்புடன் நண்பன் 👍

Birthday kavithai in tamil - பிறந்தநாள் வாழ்த்து

Image
தாய்மையின் இலக்கணத்தை  உன் தாய்க்கு பரிசளித்த நாளிது,  தன்னோடு மகிழ்ந்தாட தலைமகள் பிறந்ததாய் உன் தந்தை கொண்டாடிய நாளிது,  தேனினும் இனிய தேன்மொழியால் - நீ  தேடி வந்த நாளிது,  பூவினும் மெல்லிய பூமகள் - நீ   பூமிக்கு வந்த நாளிது,  கொண்டாடி மகிழ கோடி காரணம் இருந்த போதும் இந்நாளின் கொண்டாட்டம் போல் வருமோ?  பெற்றோரின் பிரியத்தோடு  கொண்டவனின் காதலோடு  இனிய தருணங்கள் இன்றே உன்னை அடைய  "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!"

Life motivational kavithai in tamil - தோழா

Image
தோழா ! "தோல்வி" - எனும் தேரிலே  "அவமானம்" - எனும் அச்சாணி பூட்டி  "பரிகாசம்" - எனும் பரிவட்டம் கட்டி  "நம்பிக்கை" - எனும் குதிரையை  "முயற்சி" - எனும் சாரதி கொண்டு  இயக்கினால் நீ அடைவாய், "வெற்றி"  எனும் திருமகளை !!

Tamil kavithai about father's love in tamil - அப்பா

Image
மண்ணில் நீ வந்த நாள் முதல்  மனதில் உன்னை சுமந்தவன் ! மன்னவனாய் நீ வலம் வர  மடுவை தகர்த்தவன்! மழையோ வெயிலோ உனக்காக  மாடாய் உழைத்தவன்! சிரித்து பேச தெரியாத  சின்னக்குழந்தையவன்! தவறியும் தன்னை பற்றி நினைக்காத  தியாகச்செம்மலவன் ! கடிந்து பேசும் கருணை உள்ளம்  கொண்டவன்! சிந்தையில் உன்னை நிறுத்தி  சீரோடு உன்னை வளர்க்க  தன்னை செதுக்கிய சிலை    "அப்பா "

Tamil kavithai about mother's love in tamil - அம்மா

Image
மணவாளன் கை கோர்த்து  மசக்கை தான் அடைந்து  மாதங்கள் பத்து தவமாய் நீ இருந்து  மழலையாய் என்னை பெற்றாய் !! கையில் வைத்திருந்தால் கை சூடு ஆயிடுமோ  தரையில் வைத்தால் தவறி விடலாகிடுமோ  மடியில் வைத்தால் மகளின் முகம் வாடிடுமோ  என்று,  நெஞ்சில் என்னை சுமந்தாய் !! மனதில் பட்டதை நீ சுவைத்தால்   மாந்தம் எனக்கு வருமென்று  பத்தியம் நீ இருந்து  பக்குவமாய் என்னை வளர்த்தாய் !! பள்ளிக்கு நான் சென்று  பட்டங்கள் வாங்கிடவே  பக்க துணையாக நின்றாய்!! பாராட்டுகள் நான் பெறவே  பக்கத்தில் ஒதுங்கி நின்று  பரவசம் தான் அடைந்தாய் !! அனுதினமும் என்னை நினைத்து  ஆளாக்கிய உன்னை சொல்ல  இக்கவிதை போதிடுமா? ஒரு ஜென்மம் ஆனா போதும்  உன் கடனை தீர்த்திடலாகுமா? என்றும் உன் அன்பில் உன் மகள் 🙏

Thalattu song in tamil - தாலாட்டு கவிதை

Image
ஆரி ஆராரோ ஆரி ஆராரோ  கண்ணுறங்கு கண்ணுறங்கு  கண்மணியே கண்ணுறங்கு ! அம்மாவின் அன்பினிலே  அசதி தீர கண்ணுறங்கு ! அப்பாவின் அரவணைப்பில்  அழகாக கண்ணுறங்கு ! கண்ணுறங்கு கண்ணுறங்கு  கண்மணியே கண்ணுறங்கு !! தாத்தாவின் தோளினிலே  தயக்கமின்றி கண்ணுறங்கு ! பாட்டியின் பாசத்திலே  பக்குவமாய் கண்ணுறங்கு ! கண்ணுறங்கு கண்ணுறங்கு  கண்மணியே கண்ணுறங்கு !! மாமாவின் மார்பினிலே  மயங்கி கண்ணுறங்கு ! அத்தையின் அன்பினிலே  அழகாக கண்ணுறங்கு ! கண்ணுறங்கு கண்ணுறங்கு  கண்மணியே கண்ணுறங்கு !! சித்தப்பவின் அன்பினிலே  சிறப்பாக கண்ணுறங்கு ! சித்தியின் பாசத்திலே  சீர்பெறுக கண்ணுறங்கு ! கண்ணுறங்கு கண்ணுறங்கு  கண்மணியே கண்ணுறங்கு !!

Tamil kavithai sms for husband love - காதல் தோழா

Image

Tamil kavithai about girl child abuse in tamil - தாயின் கதறல்

Image
பெற்று வளர்த்த என் பெண்ணை                 பெருங்குழியில் தள்ளி போனானே!            சீர் மிகுந்த என் கண்ணை                 சீரழிச்சு போனானே !            பிஞ்சுக்குழந்தை அவளை                பிச்செறிஞ்சு போனானே !            அவனை பெற்ற தாயும்                  பெண் தானே!            அவனோடு பிறந்த அவன் தங்கை                             பெண் தானே !           அது அறிந்தும் எது அவனை                                        தூண்டியதோ??           பிஞ்சின் முகம் கண்டு             மோகம் தான் வந்திடுமோ??          குழந்தை சிரிப்பினிலே             சிந்தை  தான்  தடுமாறிடுமோ??          இதைக்கண்டும்                வாராத கடவுளும் கல் தானோ?          காலமோ,  காமமோ இல்லை             கயவனின் கடுஞ்செயலோ,         கண்மணி உன் உயிரை வாங்கியதே !         கலங்காமல் நீ சென்று            கடவுளிடம் கேட்டு வா உனக்கான நீதியை !!!!

Tamil kavithai about infertility - கனவுத்தாய்

Image

Tamil love story - கவியும் காதலும் part 2

    நாட்களும் நகர கவியும் பள்ளி படிப்பை முடித்தால்.  கல்லுரி தேர்ந்தெடுக்க சென்னை செல்ல தன் அப்பா ஓடு ரெடி ஆகிக்கொண்டு இருந்தால் கவி. அனைத்து ஏற்பாடுகளும் தயாராக கவி தன் அப்பா ஓடு ரயில் நிலையம் அடைந்தாள். தன் பையில் இருந்து செல்போனெய் கையில் எடுத்து தனக்கு வந்த குறுஞ்செய்திகலை படித்துக்கொண்டு இருந்தால் கவி. அப்போது கருணாகரன் யாரோடு அளவலாடுவதை உணர்ந்தாள் கவி இருந்தும் தன் நண்பர்களோடு செல்போனில் பேசி கொண்டுருந்த ஆர்வத்தில் யார் என்று பார்க்க விரும்பாதவளாய் நின்றிருந்தாள் கவி. அப்போது ஒரு குரல், "என்னமா கவி எப்படி இருக்க?  என்ன தெரியுதா? " சட்டென்று திரும்பி பார்த்தால் கவி ஆனால் யார் என்று தெரியாததால் ஒரு குழப்பத்திலேயே பதில் சொன்னால் கவி, " நல்லா இருக்கேன் அங்கிள்,  சாரி உங்கள எங்கயோ பாத்தா மாதிரி இருக்கு ஆன சரியா தெரியல " என்று சொல்லி ஒரு அசட்டு சிரிப்போடு கருணாகரனை பார்த்தால் கவி. தன் மகளின் பார்வையை புரிந்து கொண்ட கருணாகரன் சட்டென்று, " இவர தெரியலையா இவர் தான் உன்னோட மாமா குமரேசன், இது அவர் பையன் கார்த்தி" என்று அறிமுக படுத்தினார். தன் நினைவுகளை தேடி

How to engage children in their free time - craft using baby scribbling

Image
As a mother we would know, it is hard to keep our children engaged for longer time. So we used to give something to scribble and throw them in the trash. Instead we can do some crafts from the scribbled papers.  Lets see how to do it, Items Required : 1.white paper 2 2. Colour pencil / crayons 3. Knife 4. Single bangle 5.Green thread How to perform :   Take a white paper and colour pencil and give to your children to scribble on it until they find it bored.    Draw a circle on them using bangle and cut them as a circles.     Take one more white sheet and paste that in some cardboard,  on that paste those circles as flowers and join them using the thread as below Here a colourful flower bot craft is ready we can hang them in the wall. Thank you!If you like this idea comments your thougts. 

Status message for one side love - தூது

Image

Tamil kavithai for one side love - தூது

நான் உன் மீது கொண்ட காதலையும், உன்னை சேர நான் கொண்ட ஆவலையும் காற்றாய் தூது செய்தேன்! அது உன் அன்பின் மென்மை கண்டு சொல்லாமல் கரைந்தது !! கடலை தூது செய்தேன் ! அது உன் ஆர்ப்பரிக்கும் மனதையும், அதில் நீ கொண்ட காதலின் ஆழத்தையும் கண்டு காணாமல் போனது !! மேகத்தை தூது செய்தேன், அது உன் பாசத்தின் தூய்மை கண்டு மழையாய் பெய்து போனது !! பூமி பெண்ணவளை தூது செய்தேன் உன் பொறுமை கண்டு பிரமித்து போனால் அவள் !! தூது செய்ய வேறேதும் இன்றி என் உயிரை தூது செய்தேன் அதுவோ உன் உயிராய் ஆனதடா என் அன்பே!!!

Status message for working women feeling for their children - En devathain alugai

Image

Tamil love story - கவியும் காதலும்.. Part 1

    அன்று ஒரு அழகிய காலை பொழுது,  விடுமுறை  முடிந்தது  பள்ளிக்கூடம் செல்ல தயாராகிக்கொண்டு  இருந்தால் கவி. கவி ஒரு சுட்டி பெண் அனைவரிடமும் சகஜமாக பழக கூடியவள்,  வாயாடி,  அழகும் அறிவும் நிறைந்த அம்சமான பெண்.    அம்மா ஸ்கூலுக்கு டைம் ஆச்சு என்னோட பாக்   எங்க? என்னோட  யூனிபோர்ம்  எங்கன்னு வீட்டையே ரெண்டாகிடு இருக்க,  கவியின் அம்மா அமைதியாக அனைத்தையும் எடுத்து குடுக்க அவளும் பள்ளிக்கு  கிளம்பினாள். போய்ட்டு வரம்மா,  அப்பா போலாமா டைம் ஆச்சு.. நான்  ரெடி டா செல்லம் வா போலாம்னு ரெடி ஆக  இருந்தாரு கவி ஓட அப்பா கருணாகரன். இருவரும் கவியின்  அம்மா கல்யாணிக்கு  பாய் சொல்லி கிளம்பினார்கள்.     பள்ளிக்கு செல்லும் வழியில் அப்பாவோடு அரட்டை  அடித்துகொண்டே சென்றால் கவி. நடு  வழியில்  ஒரு குட்டி பிள்ளையார்  கோவில் வர,  அப்பா அப்பா ஒரு நிமிஷம் என்னோட  விக்கி வந்துட்டான்னு சொல்லி  ஒரு ஸலாம் போட்டுட்டு கிளம்பினாள். அப்பா உங்களுக்கு  தெரியுமா இந்த விக்கி  என்னோட லக்கி  பாய்  பா,  நா எக்ஸாம்க்கு  போகும் போது இவனை பார்ப்பேன்,  கோவில் ஓபன்ல இருந்த எக்ஸாம் ஈசி ஆஹ் இருக்கும்  இல்லனா அம்பெல்ன்னு  சொல்லி அவளுக்கே

En Devathain Alugai...

Image
"Amma venum "  endra mathirathil un arugil naniruka ninaithean , Anal aluvalgathil adimaiyai nanirunthean! "Amma ingayea iru "  endru nee solli ponai pallikullea Irupean endru solli unakaga kathiruka kanavu kandean , Anal athu kalainthu ponathu kasu ennum kagithathukaga! "Amma ennudanea iru "  endru nee kenjum pothu Un kannin thuligal kelea vilum munea Anaithaium thooki veesi un arugea naniruka odi vara ninaithean , Anal ondrum panna mudiyamal odinthu ponean nam kudumbathukaga , En kutti devathaiyea !   Ethai solli puriya veipean en nilamaiyai..  Un kaneerin karanam nan arivean   En kaneerin aarthathai nee aarium varai nan kathirupean mounamaga....   Eppozhuthum un ninaivudan AMMA........