Tamil kavithai about girl child abuse in tamil - தாயின் கதறல்



பெற்று வளர்த்த என் பெண்ணை 
               பெருங்குழியில் தள்ளி போனானே!
           சீர் மிகுந்த என் கண்ணை
                சீரழிச்சு போனானே !
           பிஞ்சுக்குழந்தை அவளை
               பிச்செறிஞ்சு போனானே !

           அவனை பெற்ற தாயும்
                 பெண் தானே!
           அவனோடு பிறந்த அவன் தங்கை                             பெண் தானே !
          அது அறிந்தும் எது அவனை                                        தூண்டியதோ??

          பிஞ்சின் முகம் கண்டு
            மோகம் தான் வந்திடுமோ??
         குழந்தை சிரிப்பினிலே
            சிந்தை  தான்  தடுமாறிடுமோ??
         இதைக்கண்டும்
               வாராத கடவுளும் கல் தானோ?

         காலமோ,  காமமோ இல்லை
            கயவனின் கடுஞ்செயலோ,
        கண்மணி உன் உயிரை வாங்கியதே !

        கலங்காமல் நீ சென்று
           கடவுளிடம் கேட்டு வா
உனக்கான நீதியை !!!!

Comments

Post a Comment

Popular posts from this blog

Tamil kavithai for daughter, daughter's love - மகளுக்கோர் கடிதம்...

Tamil kavithai about pregnancy - தாய்மை