Tamil love story - கவியும் காதலும்.. Part 1

    அன்று ஒரு அழகிய காலை பொழுது,  விடுமுறை  முடிந்தது  பள்ளிக்கூடம் செல்ல தயாராகிக்கொண்டு  இருந்தால் கவி. கவி ஒரு சுட்டி பெண் அனைவரிடமும் சகஜமாக பழக கூடியவள்,  வாயாடி,  அழகும் அறிவும் நிறைந்த அம்சமான பெண்.
   அம்மா ஸ்கூலுக்கு டைம் ஆச்சு என்னோட பாக்   எங்க? என்னோட  யூனிபோர்ம்  எங்கன்னு வீட்டையே ரெண்டாகிடு இருக்க,  கவியின் அம்மா அமைதியாக அனைத்தையும் எடுத்து குடுக்க அவளும் பள்ளிக்கு  கிளம்பினாள். போய்ட்டு வரம்மா,  அப்பா போலாமா டைம் ஆச்சு.. நான்  ரெடி டா செல்லம் வா போலாம்னு ரெடி ஆக  இருந்தாரு கவி ஓட அப்பா கருணாகரன். இருவரும் கவியின்  அம்மா கல்யாணிக்கு  பாய் சொல்லி கிளம்பினார்கள்.
    பள்ளிக்கு செல்லும் வழியில் அப்பாவோடு அரட்டை  அடித்துகொண்டே சென்றால் கவி. நடு  வழியில்  ஒரு குட்டி பிள்ளையார்  கோவில் வர,  அப்பா அப்பா ஒரு நிமிஷம் என்னோட  விக்கி வந்துட்டான்னு சொல்லி  ஒரு ஸலாம் போட்டுட்டு கிளம்பினாள். அப்பா உங்களுக்கு  தெரியுமா இந்த விக்கி  என்னோட லக்கி  பாய்  பா,  நா எக்ஸாம்க்கு  போகும் போது இவனை பார்ப்பேன்,  கோவில் ஓபன்ல இருந்த எக்ஸாம் ஈசி ஆஹ் இருக்கும்  இல்லனா அம்பெல்ன்னு  சொல்லி அவளுக்கே  உரிய  சிரிப்போட கடந்து போனல் ... கொஞ்ச தூரம் போனதும் ஒரு பெரிய அரசமரம்  அது பாக்க குட்டி நாய் வடிவத்துல  இருக்கும் அது  நம்ம கவி ஓட  பிரண்ட். அதுக்கும் ஒரு ஹாய்  சொல்லிட்டு  பள்ளிக்கு போய் சேர்ந்த. அப்பா கு ஒரு அவசர பாய் சொல்லிட்டு குடு குடுன்னு கிளாஸ்க்கு  ஓடின கவி... அவளோட  இடத்த  பாத்து உக்காந்து அவளோட  பிரிஎண்ட்ஸ வர வெயிட்  பண்ணிட்டு இருந்த. அவளோட பிரிஎண்ட்ஸ்  ரெண்டு  பேரு இவள மாதிரியே சுட்டிஸ் அருணா,  ராகவி. இவுங்க ஒன்ன சேர்ந்த அந்த இடத்துல இருக்குறவங்க   பாவம். அந்த  அளவுக்கு  வாழுங்க.
    அருணாவும் ராகவியும் ஒரே ஏரியா அதனால  ஒன்ன தா வருவாங்க. அவுங்களும் வர,  மூணு பேரும் விடுமுறையில் நடந்ததை  பத்தி அசை  போடா ஆரம்பிக்க முதல்  பாட வகுப்பும் ஆரம்பித்தது. மூணு  பேருக்கும் சுத்தமும் புடிக்காத இயற்பியல் வகுப்பு. முதல் நாள் பாடம் எடுக்க மாட்டாருனு  நினச்சா மனுஷ  ஆரம்பிச்சுட்டார் பாருன்னு  ஒரு துண்டு சீட் கவிகிட்ட இருந்து  ராகவிக்கு  போக அவளும் ஆமாண்டி இவர் எப்பவும்  இப்படி  தாணு பதில் சீட் அனுப்ப இந்த அருணா  மட்டும் பாடத்தை  கவனிச்சுட்டு இருந்தா. இப்படியே பாதி கவனிப்பு  பாதி விளையாட்ட அந்த நாளை கடத்தினார்கள்.
     கடைசி  வகுப்பு  முடிந்ததும் கொஞ்ச நேரம் அரட்டை அடித்து விட்டு கிளம்பினார்கள் முவரும். ரோட்ல நடக்கும் போதும்  அவர்கள் குறும்பு கொறையாம இருக்க மூணு பேரும் நடு ரோட்ல  நடந்தார்கள். பின்னாடி  வண்டி எதுவும் வந்து சத்தம் போட்ட போதும் மூணு பேரும் கோர்ரஸா நாங்க இப்படி தான்  போவோம் வேணும்னா ஓரமா பொய்க்கோனு சவுண்ட்  குடுத்துட்டு ஓடுவாங்க. இது ஒரு விளையாட்டு.. இப்படியே நாட்களும் சந்தோசமா போய்ட்டு  இருக்க வந்தது அந்த சோகமான காலம் அது தான் தேர்வு காலம்.
     கவியும் அன்னைக்கு எக்ஸாம்  எப்படி இருக்கும்னு பிள்ளையார்  கோவில பாத்து முடிவு பண்ணிட்டு வருவா. எக்ஸாம் போறதுக்கு முன்னாடி ஆஞ்சநேயர உதவிக்கு கூட்டிட்டு போவாங்க மூணு பேரும். எக்ஸாம் முடுச்சுட்டு வீட்டுக்கு போகும் போதும் அதே சேட்டை  எல்லாம் பண்ணிட்டு போவாங்க.
     இப்படியே  போய்ட்டு இருக்கும் போதும் ஒரு நாள்,  அப்பாவோட பின்னாடி அரட்டை அடுச்சுட்டு வந்த கவி யாரோ அவளை பாத்துட்டு  இருக்குறத உணர்ந்து  திரும்பி பாத்தா ரொம்ப அழகும் ஆண்மையும் இருக்க ஒரு பையன்  அவனும் எதோ ஒரு ஸ்கூல்  யூனிபோர்ம் போட்டுட்டு சைக்கிள்ல வந்துட்டு  இருந்தான். ஏன்னு புரியாம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துட்டே கடந்து போனாங்க. வண்டி கொஞ்ச தூரம் போனா பின்னாடியும் கவிக்கு அவனோட முகம் கண்ணை விட்டு விலகலை. அதே நினைவோடு பள்ளிக்கு சென்றால் கவி. அருணாவும் ராகவியும் என்னடி விக்கி இன்னைக்கு எக்ஸாம் ஈஸியா வரும்னு சொன்னானா இல்லையானு கேக்க விக்கி இன்னைக்கு பாக்க மறந்துட்டோம்னு புரிஞ்சுது கவிக்கு. கவி திரு திருனு முழிக்க  அருணாவும் ராகவியும் அவர்களுக்கு உரிய திட்டை போட்டு விட்டு எக்ஸாம் ஹாலுக்கு போக,  கவியும் அந்த பையனின் நினைவில் இருந்து வெளிய வந்து உள்ளே சென்றால்...
     அடுத்த நாளும் அந்த இடம் வந்ததும் கவின் கண்கள் அவனை தேட அவனோ கண்ணில் படவில்லை. கவி அவளுக்கு உரிய கியூட் சிரிப்போட தலைல ஒரு தட்டு தட்டிட்டு அவளோட வழக்கத்தை பார்த்தால். அன்னைக்கி தான் கடைசி எக்ஸாம், முடுச்சுட்டு மூணு பேரும் கிளாஸ் ல உக்காந்து அரட்டை அடிச்சுட்டு இருக்க மெதுவா கவி ஆரம்பித்தாள்,
     உங்க ரெண்டு பேர் கிட்டியும் சொல்ல மறந்துட்டே டி நா ஒரு பையன பாத்தா செமயா இருந்தா நடுவில் குறுக்கிட்டால் ராகவி அவ உன்ன பத்தான?  கவி,  ஆமாடி பாத்தா... உடனே அருணா செமயா இருந்தன்கிற எப்படி உன்ன பாத்தா???  இப்படியே அருணாவும் ரகவியும் மாத்தி மாத்தி கலாய்க்க கவியின் முகம் சுருண்டு போனது..
     அப்படியே ஏதோ ஏதோ பேச கவியும் மறந்து போனால்  அந்த பையனின் முகத்தையே... 

Comments

Post a Comment

Popular posts from this blog

Tamil kavithai for daughter, daughter's love - மகளுக்கோர் கடிதம்...

Tamil kavithai about pregnancy - தாய்மை