Tamil kavithai for husband who lives in abroad - காதல் ஏக்கம்



நாட்டை விட்டு நாடு சென்ற நாயகனே 
நாளும் நான் படும் வேதனை அறிவாயோ? 

 நாளும் நகரவில்லை 
 நல்ல சோறு இரங்கவில்லை !

நித்தமும் உன் நினைவில் 
நித்திரையும் வரவில்லை !

உறவுகள் சூழ்ந்திருந்தும் 
உற்ற துணை யாருமில்லை !

நாள் பொழுது பார்க்கவில்லை 
நாட்டமும் எதிலுமில்லை !

கைபேசி தனிலே கண்ணா, 
உன் முகம் பார்க்கும் 
கணநேரம் கறையுதடா என் கவலை!

நெஞ்சிலே நினைவை சுமந்து 
கண்ணீரில் காலம் கடத்தி 
காதலே காத்திருக்கிறேன் உனக்காக !

காலமும் கடத்தாமல் 
கடமை தானுணர்ந்து 
கடல் தாண்டி வாராயோ எந்தன் கண்ணாளனே !!

Comments

Popular posts from this blog

Tamil kavithai for daughter, daughter's love - மகளுக்கோர் கடிதம்...

Tamil kavithai about pregnancy - தாய்மை