Tamil kavithai for daughter, daughter's love - மகளுக்கோர் கடிதம்...



அழகிய என் மகளே 
அன்பாய் ஓர் கடிதம், 

கருவில் நீ வந்த, 
காலம் முதலாக, 
கனவும் நீயின்றி இல்லையடி !

கண்ணே உன் முதல் பார்வை, 
என் கண்ணுக்குள் 
நீங்காத காட்சியடி !

உன் மூச்சு எனை உரச, 
நீ உண்ட முதல் பாலை, 
முத்தமிழும் விளக்கிட இயலுமோடி !

உன் பிஞ்சு கைகோர்த்து, 
நெஞ்சம் மகிழ்ந்த கதை, 
நினைக்கும் போதெல்லாம் இனிக்குதடி !

அம்மா என்றழைத்து, 
அழகாய் சிரிக்கையிலே, 
அகிலமும் சிறிதாகி போனதடி !

உன் செயலை நான் பார்த்து, 
அதில் என் செயலும் தெரிகையிலே, 
என் தாயின் உணர்வுகளும் புரியுதடி!

சின்ன குழந்தையென உன்னை பார்க்கையிலே, 
சீரான உன் பேச்சு, 
என்னை கொஞ்சம் அசத்துதடி !

சோர்ந்து நான் படுத்து, இயலாமல் நானிருந்தால், 
உன்மடியில் எனைத்தாழ்த்தி நீகாட்டும் அரவணைப்பில், 
நீயும் என் தாய்யென்று தோணுதடி !

எப்பிறவி எக்காலம் நான் செய்ததவமோ? 
எஞ்சாமி நீ வந்தாய் 
என்வாழ்வின் வரமாய் !

இன்னொரு பிறவி எனக்கிருந்தால் 
என் உயிரே 
நீயே மகளாக வேணுமடி !!

                                  ... என்றும் அன்புடன் அம்மா 


Comments

Post a Comment

Popular posts from this blog

Tamil kavithai about pregnancy - தாய்மை