Tamil kavithai about pregnancy - தாய்மை


நாயகன் கைகோர்த்து நாளொரு தவமிருந்து 
நாட்கள் தள்ளி நல்லதொரு சேதி 
சொன்ன  நாள் முதல் தொடங்கியது 
தாய்மையின் முதல் அத்தியாயம் !

மசக்கையின் மந்திரத்தில் 
மாற்றங்கள் எனக்குவர 
மன்னவன் தோல் சாய்ந்து 
மயக்கம் வருகுதென்றேன் !

தூயவளே துயர் வேண்டாம், 
நம் குழந்தை நீ சும்மக்க 
என் குழந்தையாய் உன்னை நான் சுமக்கிறேன் 
துணிந்து வா என்னோடு என்றுரைத்தான் !

வாந்தியும் சோர்வும் வாட்டி வதக்கையிலே 
வசமிழந்து வந்து நின்றேன் என் தாயிடம், 

என் மகளே,  மாதராய் பிறந்திட்டால் 
மணிமுத்தை பெற்றெடுக்க 
ஈரைந்து மாதங்கள்
இவையனைத்தும் வருமென்று 
பக்குவமாய் எடுத்துரைத்தாள் !

பிடித்ததெல்லாம் பிடிக்காமல் போக 
பிடிக்காததெல்லாம் பிடித்துப்போக 
அவையனைத்தையும் சுவைத்து தீர்க்க 
முதல் மூன்று மாதமும் முறையாய் முடிந்தது !

பிறர் சொல்லி கேட்டறிந்தேன் 
காட்சியாக பாத்திருந்தேன் 
மனதார நானுணர்ந்து 
மகிழ்ந்து திளைத்திருந்தேன் உன் அசைவில் !

என் வயிறும் வளர்ந்திருக்க 
வாட்டமும் குறைந்திருக்க
வசமாய் வளைந்து போனது 
இரண்டாம் மூன்று மாதமும் !

நீ வரும் நாளை நித்தமும் எதிர்நோக்கி 
நித்திரையும் நினைவாகி போனதே, 
உயிர் போகும் வலி என்றறிந்தும் 
உனக்காக எதிர் கொள்ள துணிந்தேன் 
என் கண்மணியே !
அம்மா அம்மா என்று பலமுறை நான் அலற 
அழகாக நீ வந்தாய் என்னை 
அம்மா என்றழைக்க 
என் பூங்குயிலே !!

Comments

Post a Comment

Popular posts from this blog

Tamil kavithai for daughter, daughter's love - மகளுக்கோர் கடிதம்...