Tamil kavithai about pregnancy - தாய்மை
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyBWMCKxNno3b9wSDe3s0-AYGOm89ykVQ7-i1pBDZhiZst0HYuBJdI6IXZ2xG6ojs2E0jqRjBmi4X2ydm9OBeHXvauDw9K3uOKutnfRVRjp6N7LwT6dZGqINNoIjytWAeAu3WYBYixfhA/s320/images+%25289%2529.jpeg)
நாயகன் கைகோர்த்து நாளொரு தவமிருந்து நாட்கள் தள்ளி நல்லதொரு சேதி சொன்ன நாள் முதல் தொடங்கியது தாய்மையின் முதல் அத்தியாயம் ! மசக்கையின் மந்திரத்தில் மாற்றங்கள் எனக்குவர மன்னவன் தோல் சாய்ந்து மயக்கம் வருகுதென்றேன் ! தூயவளே துயர் வேண்டாம், நம் குழந்தை நீ சும்மக்க என் குழந்தையாய் உன்னை நான் சுமக்கிறேன் துணிந்து வா என்னோடு என்றுரைத்தான் ! வாந்தியும் சோர்வும் வாட்டி வதக்கையிலே வசமிழந்து வந்து நின்றேன் என் தாயிடம், என் மகளே, மாதராய் பிறந்திட்டால் மணிமுத்தை பெற்றெடுக்க ஈரைந்து மாதங்கள் இவையனைத்தும் வருமென்று பக்குவமாய் எடுத்துரைத்தாள் ! பிடித்ததெல்லாம் பிடிக்காமல் போக பிடிக்காததெல்லாம் பிடித்துப்போக அவையனைத்தையும் சுவைத்து தீர்க்க முதல் மூன்று மாதமும் முறையாய் முடிந்தது ! பிறர் சொல்லி கேட்டறிந்தேன் காட்சியாக பாத்திருந்தேன் மனதார நானுணர்ந்து மகிழ்ந்து திளைத்திருந்தேன் உன் அசைவில் ! என் வயிறும் வளர்ந்திருக்க வாட்டமும் குறைந்திருக்க வசமாய் வளைந்து போனது இரண்டாம் மூன்று மாதமும் ! நீ வரும் நாள